Friday, April 20, 2012

ஜில் ஜில் கூல் கூல் குல்பி

விடுமுறை நாட்கள் தொடங்கி விட்டது, அதிகபடியான வெயிலும் தொடங்கி விட்டது... இந்நேரத்தில் அனைவரும் விரும்புவது ஜில்லுனு ஒரு ஐஸ் கிரீம்... சிறுவர்கள் வீட்டுலே இருப்பதால் தினமும் ஐஸ் கிரீம் வாங்கி தர சொல்லுவார்கள்.. எனவே இன்று நாம் வீட்டுலேயே எப்படி சுலபமா ஐஸ் கிரீம் செய்வதுனு பார்போம்.. (ஆமாம் இருக்குற கரண்ட் பிரச்சனைல எங்கேந்து ஐஸ் கிரீம் செய்வதுனு ! உங்க மனசு சொல்லுறது கேக்குதுங்க... அதுக்கும் ஒரு டிப்ஸ் கடைசியா சொல்லுறேன்.. )


தேவையான பொருட்கள் 
பால் - 1 லிட்டர்
மில்க் மேட் - 3 ஸ்பூன்
சக்கரை - 5 ஸ்பூன்
மைதா / சோள மாவு - 2 ஸ்பூன்
குங்கும பூ - 1 சிட்டிகை
பிஸ்தா, பாதாம் பருப்பு - தலா 5

செய்முறை

  • பாலை நன்றாக காச்ச வேண்டும். பால் நல்லா திக்கான வுடன் நிதானமான தீயில் வைத்து  கொள்ளவும்.

  • குங்குமபூ, சக்கரை, மில்க் மேட் சேர்த்து கிளறவும்.
  • சக்கரை கரைந்தவுடன் பாதாம், பிஸ்தா பருப்பை ஒன்னும் பாதியாகவும் உடைத்து அதனுடன் சேர்க்கவும்.


  • கடைசியாக மைதா மாவை தண்ணீரில் கரைத்து ஊற்றி கிளறவும். 

  • 5 நிமிடம் கொதிக்க வேண்டும். கஞ்சி போல் வந்து விடும்.
  • இப்பொழுது அடுப்பை அனைத்து விடவும். சூடு அடங்கியதும் குல்பி மோல்டில் ஊற்றி ப்ரிட்ஜில் பிரீசரில் வைக்கவும்.
  • குறைந்தது 6 மணி நேரம் கழித்து பரிமாறவும். ஜில் ஜில்  கூல் கூல் குல்பி தயார்.
குறிப்பு
  • தேவையான பொருட்களில் மில்க் மேட் வீட்டில் இல்லை என்றால் கவலை வேண்டாம், அதற்கு பதில் சக்கரையின் அளவை அதிகமாகி கொள்ளவும். பெரிய மாற்றம் தெரியாது.
  • இனிப்பின் அளவு அதிகமாக இருக்க வேண்டும் அப்போது  தான் ஐஸ் கிரீம் செட்  ஆனவுடன் சுவைத்தால் செரியாக  இருக்கும். 
  • வீட்டில் கேசர் பாதாம் காம்ப்ளான் (kesar badam flavour complan) இருந்தால் அதையும் ஒரு ஸ்பூன் சேர்த்து கொள்ளுங்கள்  சுவை கூடும்.
  • இதே முறையில் குங்கும பூக்கு பதிலாக  சிறிது வெண்ணிலா எசென்சு சேர்த்தால் வெண்ணிலா ஐஸ் கிரீம் தயார்.
  • விரைவாக ஐஸ் கிரீம் செட்டாக வேண்டும் என்றால் அலுமினிய பாத்திரத்தில் ஊற்றி வைக்கவும். 3 மணி நேரத்தில் செட் ஆகி விடும். 

  • குல்பி மொல்ட்கள் இப்பொழுது அலுமிநியதிலும் கிடைகிறது.


Friday, April 13, 2012

பிசா



பிசா என்பது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பும் உணவாக மாறிவிட்டது. கடைகளில் வாங்கி சாப்பிடும் பிசா நம் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்  என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆகையால் நம் வீட்டுலேயே இருக்கும் பொருட்களை வைத்து சுவையான, எளிமையான பிசாவை செய்து சாப்பிடுவோமே.....!

தேவையான பொருட்கள்

மைதா - 2 கப்
கோதுமை மாவு - 1 கப்
சக்கரை -  1/2 ஸ்பூன்
உப்பு - 1/௨ ஸ்பூன்
எண்ணெய் - 2 ஸ்பூன்
ட்ரை யீஸ்ட் (dry yeast) - 1 ஸ்பூன்
பால் - 1 கப்
பூண்டு-மிளகாய் சாஸ் / தக்காளி சாஸ் - 3 ஸ்பூன்
வெங்காயம் - 1
தக்காளி - 1
கொடைமிளகாய் - 1
பட்டன் மஷ்ரூம் - 3
துருவிய சீஸ் - 1 கப்

செய்முறை

  • ஒரு கிண்ணத்தில் வெது வெதுப்பான சூட்டில் பாலை எடுத்து கொள்ளவும்.

  • அதில் ஒரு ஸ்பூன் யீஸ்ட், சக்கரை, உப்பு, 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கலந்து 10 நிமிடம் மூடி வைக்கவும்.
  • 10 நிமிடம் கழித்து ஒரு அகலமான பாத்திரத்தில் மைதா, கோதுமை மாவு, பால் கலவை சேர்த்து பிசையவும். இருக்கமாக பிசையாமல் சற்று தலசாக பிசையவும். தேவைபட்டால் தண்ணீர் தெளித்து கொள்ளவும்.

  • பிசைந்த மாவை மூடி வைக்கவும். 2 மணி நேரம் கழித்து பார்த்தல் 3 மடங்காக மாவு மாறி இருக்கும்.
  • கீழே உள்ள படத்தை பார்த்தால் புரியும். கைகளால் மாவை குற்றினால் காற்று வெளியேறி மீண்டும் சிறிதாகி விடும். காற்று அனைத்தும் வெளியேறும் படி நன்கு பிசையவும்.

  • பெரிய உருண்டைகளாக மாவை பிரித்து சப்பாத்தி திரட்டுவது போல் திரட்டவும்.
  • மாவு தலசாக இருப்பதால் மேல் மாவு அதிகமாக சேர்த்து திரட்ட வேண்டும்.இதை பிசா பேஸ் என்பார்கள்.

  • இந்த திரட்டின மாவை ஓவன் தட்டில் வைத்து 450'F சூட்டில் 5 நிமிடம் பேக் செய்யவும்.
  • அதற்குள் வெங்காயம், தக்காளி, கொடைமிளகாய், மஷ்ரூம் அனைத்தையும் நடுத்தரமான அளவில் வெட்டி கொள்ளவும்.
  • படத்தில் காட்டி இருப்பது போல் ஓவனில் மாவு எழும்பி இருக்கும். 

  • இப்பொழுது அதை எடுத்து சாஸ் தடவி காய்கறிகளை விருப்பம் போல் அலங்கரித்து , சீஸை மேலே துவவும்

  • மீண்டும் ஓவனில் 10 நிமிடம் 450 'F சூட்டில் வைக்கவும்.

  • சூடான சுவையான பிசா தயார்.

குறிப்பு 

  • பிசா மாவை காற்று புகாத டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்து 4 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.
  • உங்கள் விருப்பம் போல் காய்கறிகளை பயன்படுத்தலாம்.






Sunday, April 8, 2012

பாகற்காய் பகோடா



தேவையான பொருட்கள்

பாகற்காய் - 1/4 கிலோ
உப்பு - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
தனியா தூள் - 1 ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1/4 ஸ்பூன்
மஞ்ச தூள் - 1/2 ஸ்பூன்
கடலை மாவு  - 1 கப்
அரிசி மாவு - 1/4 கப்
எண்ணெய் - பொரிப்பதற்கு

செய்முறை

  • முதலில் பாகற்காய் யை கழுவி மெல்லிதாக வெட்டி கொள்ளவும்.   

  • ஒரு பாத்திரத்தில் கொடுக்க பட்டுள்ள மாவு, தூள் வகைகள், உப்பு அனைத்தையும் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.

  • பின்பு நறுக்கி வைத்துள்ள பாகற்காயும் சேர்த்து கலந்து கொள்ளவும்.

  • எண்ணெய் காய வைத்து பாகற்காயை பொன் நிறமாக பொரித்து எடுக்கவும்.
  • எளிமையான சுவையான பாகற்காய் பகோடா தயார்.

Monday, April 2, 2012

பீட்ரூட் அல்வா




தேவையான பொருட்கள்

பீட்ரூட் - 2
பால் - 1 கப்
சக்கரை - 1/2 கப்
உப்பு - ஒரு சிட்டிகை
ஏலக்காய் பொடி - ஒரு சிட்டிகை
முந்திரி - 5
நெய் - 5 ஸ்பூன்

செய்முறை

  • முதலில் பீட்ரூட் யை  தோல் சீவி துருவி கொள்ளவும்.

  • வாணலில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி துருவிய பீட்ரூட் யை  பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

  • வதக்கும் பொழுதே ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கொள்ளவும். சீக்கரம் வதங்கும், சுவையும் அதிகரிக்கும். (எப்பொழுதும் ஸ்வீட் செய்யும் பொழுது ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கொண்டால் சுவை கூடும்.)
  • பீட்ரூட் வதங்கியதும் ஒரு கப் பாலையும் அதனுடன் சேர்த்து வேக விடவும். சுமார் 10 நிமிடம் ஆகும்.

  • பால் சுண்டி பீட்ரூட் நன்கு வெந்து இருக்கும் பொழுது, சக்கரை சேர்த்து கிளறவும்.
  • இப்பொழுது சக்கரை கரைந்து நீர் சேர்த்தது போல் இருக்கும்.

  • பிறகு வாணலில் ஒட்டாமல் அல்வா பதம் வரும் வரை கிளறவும்.
  • நன்கு சுருண்டு அல்வா பதம் வந்ததும் ஏலக்காய் பொடி, மீதம் உள்ள நெய்,  வறுத்த முந்திரி சேர்த்து கிளறவும். 

  • சுவையான சத்தான பீட்ரூட் அல்வா தயார். இதற்கு அதிகம் நெய் அல்லது எண்ணெய் குட தேவை படாது.