Monday, March 19, 2012

இஞ்சி குழம்பு


தேவையான பொருட்கள் 

இஞ்சி - 100gm
புளி-  சிறிய நெல்லிக்காய் அளவு
உப்பு - ருசிக்கேற்ப
கடுகு - 2 டீஸ்பூன்
துவரம் பருப்பு - 5 ஸ்பூன்
சிகப்பு மிளகாய் - 4
கருவேப்பிலை - தேவைகேற்ப
மஞ்ச தூள் - 1 டீ ஸ்பூன்
பெருங்காயம் - 1 சிட்டிகை
எண்ணெய் - தாளிக்க

செய்முறை 
1) முதலில் இஞ்சியை தோல் நீக்கி சுத்தம் செய்ய வேண்டும். பின் துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.


 2) ஒரு வாணலில் எண்ணெய் ஒரு ஸ்பூன் ஊற்றி வெட்டிய இஞ்சியை பொன் நிறம் ஆகும் வரை வதக்கவும்.

3) பின் ஆறவைத்து பேஸ்ட் ஆக அரைத்து தனியே வைத்து கொள்ளவும்.


4) வாணலில் எண்ணெய் ஊற்றி கடுகு, துவரம் பருப்பு, கருவேப்பிலை, சிகப்பு மிளகாய் தாளிக்கவும்.


5) துவரம் பருப்பு நன்கு சிவந்ததும் மஞ்ச தூள்,அரைத்த இஞ்சி விழுது,புளி கரைச்சல் உப்பு சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.


7) குழம்பு பதம் வந்த உடன் இறக்கி விடவும். கடுகு, சீரகம், சிகப்பு மிளகாய், பெருங்காயம், கருவேப்பிலை தாளித்து குழம்புடன் சேர்க்கவும்.

குறிப்பு:
  • இஞ்சியில் உள்ள சில மருத்துவத் தன்மைகள் இரத்தக் குழாய்களில் நேரிடும் இரத்த உறைவு காரணமாக வரும் மாரடைப்பைத் தடுப்பதாகக் கண்டு பிடித்துள்ளனர்.
  • ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி நசுக்கி, ஒரு கோப்பை பாலில் இட்டுக் காய்ச்சி வடிகட்டி, அதனுடன் கற்கண்டு சேர்த்து குடித்துவர, இருமல், சளி தொல்லைகள் நீங்கும்.
  • இயற்கையின் ஓர் கொடை தான் இந்த இஞ்சி, மூட்டு வலி உட்பட எந்த வலியையும் போக்கும் தன்மை இஞ்சிக்கு உண்டு. 
  • கொதிக்கும் தண்ணீரில் இரண்டு துண்டு இஞ்சியை நறுக்கிப் போட்டு, அந்த தண்ணீரை குடித்து பாருங்கள். சோடா வகைகளில் இஞ்சி சோடாவும் உண்டு.



No comments:

Post a Comment