Friday, March 1, 2013

தக்காளி குருமா




தேவையான பொருட்கள் 

தக்காளி - 5
கொத்தமல்லி - 1 கப்
பச்சைமிளகாய் - 2
மிளகாய் பொடி - 1 ஸ்பூன்
தனியா பொடி - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

தாளிக்க

எண்ணெய் - 1 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
கடலை பருப்பு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
பெருங்காயம் - 1 சிட்டிகை
மஞ்ச தூள் - 1 சிட்டிகை

அரைத்துக் கொள்ளவும் 

தேங்காய் துருவல் - 4 ஸ்பூன்
பொட்டுகடலை - 1 ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்

செய்முறை 

  • தக்காளி, கொத்தமல்லி இரண்டையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • வாணலில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு,உளுத்தம் பருப்பு,கடலை பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம், மஞ்ச தூள் சேர்த்து தாளிக்கவும்.
  • பருப்பு சிவந்ததும் தக்காளியை அதனுடன் சேர்த்து வதக்கவும். 
  • அதனுடன் உப்பு சேர்த்து வதக்கவும் இதனால் தக்காளி உடனடியாக வதங்கும்.
  • நன்கு வதங்கிய பிறகு அதனுடன் மிளகாய் பொடி, தனியா பொடி சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர்  சேர்த்து கொதிக்க விடவும்.
  • மிளகாய் தூள் வாசம் போனவுடன் அதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, அரைத்த விழுது சேர்த்து 10நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.
  • சுவையான சுலபமான குருமா தயார்.
  • சப்பாத்தி, பூரி யுடன் இந்த குருமா அருமையாக இருக்கும்.

No comments:

Post a Comment