Thursday, March 29, 2012

இடியாப்பம் ப்ரை




தேவையான பொருட்கள் 

இடியாப்பம் - 4 கப்
பட்டை- 1
லவகம் - 2
ஏலக்காய் - 1
இஞ்சி பூண்டு துருவல் - 1 ஸ்பூன்
வெங்காயம் - 1 பெரியது
கேரட், பீன்ஸ், உருளை கிழங்கு - 1 கப் (பொடியாக நறுக்கியது )
பச்சை மிளகாய் - 3
எலும்பிச்சை சாறு- 2 ஸ்பூன்
உப்பு - ருசிக்கேற்ப
எண்ணெய்- 3 ஸ்பூன்

செய்முறை 

  • வெங்காயம் பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.பச்சை மிளகாய் யை இரண்டாக வெட்டி கொள்ளவும்.

  • வாணலில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவகம், ஏலக்காய் தாளித்து இஞ்சி பூண்டு துருவலை சேர்க்கவும்.
  • அது லேசாக சிவந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து 3 நிமிடம்  வதக்கவும்.

  • பிறகு பச்சை மிளகாய், காய்கறி கலவை, உப்பு சேர்த்து வதக்கவும்.
  • கொஞ்சமாக தண்ணீர் தெளித்து 5 நிமிடம் மூடி வேக விடவும்.

  • காய்கறி வெந்த உடன் இடியாப்பமும் சேர்த்து நன்கு கிளறவும்.

  • கடைசியாக எலும்பிச்சை சாறு சேர்த்து கிளறி இறக்கவும்.
  • தேவை பட்டாள் கொத்தமல்லி சேர்த்து கொள்ளவும். 




Sunday, March 25, 2012

ரவா பொங்கல்





தேவையான பொருட்கள்

ரவா - 1 கப்
பயத்தம் பருப்பு - 1/2 கப்
பச்சை மிளகாய் - 1
மஞ்ச தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - ருசிக்கேற்ப 

தாளிக்க

நெய் - 2 டேபிள்ஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
இஞ்சி - ஒரு சிறு துண்டு
முந்திரிப்பருப்பு - சிறிது
கறிவேப்பிலை - சிறிது


செய்முறை

  • இஞ்சி யை தோல் சீவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • வெறும் வாணலில் பயந்தம் பருப்பை சிவக்க வறுத்து எடுக்கவும்.
  • அதே வாணலில் ரவை யையும் 3நிமிடம் வறுத்து எடுக்கவும்.(சிவக்க வருக்க வேண்டாம்)

  • பயத்தம் பருப்புக்கு 2 கப் தண்ணீர், பச்சை மிளகாய், மஞ்ச தூள்  சேர்த்து குக்கரில்  2 விசில் விட்டு வேகவைத்து எடுக்கவும்.

  • வாணலில் வேகவைத்த பருப்பு அதனுடன் 4 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

  • தண்ணீர் கொதிக்கும் பொழுது ரவையும், உப்பு  அதனுடன் சேர்த்து கிளறி 10 நிமிடம் வேக விட்டு இறக்கவும்.

  • வேற ஒரு வாணலில் நெய் சேர்த்து சீரகம், மிளகு, முந்திரி, இஞ்சி துண்டு, கருவேப்பிலை, பெருங்காயம் தாளித்து வேக வைத்த ரவை பயத்தம் பருப்புடன் கிளறவும்.
  • சூடான  ரவா பொங்கல் தயார். சட்னி அல்லது சாம்பார் உடன் பரிமாற மிக சுவையாக இருக்கும்.





Wednesday, March 21, 2012

சௌ சௌ,சுரைக்காய் மசாலா கூட்டு




தேவையான பொருட்கள் 

சின்ன வெங்காயம் - 1 கப்
தக்காளி - 1
பாசிப் பருப்பு - 1 கப்
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
கிராம்பு, பட்டை, லவகம் - தலா 1
சௌ சௌ & சுரைக்காய் - 1 கப் (சதுரங்களாக வெட்டியது )
பூண்டு பற்கள் - 5
பச்சை மிளகாய் -2
மிளகாய் தூள் - 1  டீஸ்பூன்
தனியா தூள் - 2  டீ ஸ்பூன்
மஞ்ச தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - ருசிக்கேற்ப

தாளிக்க

கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்த பருப்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
சிகப்பு மிளகாய் - 2
கருவேப்பிலை - சிறிதளவு
பெருங்காயம் - 1 சிட்டிகை
எண்ணெய் - 3 ஸ்பூன்

செய்முறை 

  • சின்ன வெங்காயத்தை முழுசாக உரித்து வைத்து கொள்ளவும். தக்காளியை 6 துண்டுகளாக வெட்டி கொள்ளவும். பாசிப் பருப்பை அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
  • ஒரு குக்கரில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி  பட்டை,கிராம்பு,லவகம் தாளிக்கவும்.
  • அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். அதனுடன் சின்ன வெங்காயம் சேர்க்கவும்.
  • வெங்காயம் பொன் நிறம் ஆனதும், பொடியாக நறுக்கிய தக்காளி, பூண்டு பற்கள், பச்சை மிளகாய்  சேர்த்து வதக்கவும்.
  • பின் மஞ்ச தூள், மிளகாய் தூள், தனியா தூள், உப்பு சேர்க்கவும்.ஊற வைத்துள்ள பாசிப் பருப்பு, நறுக்கிய காய்கறி சேர்த்து ஒரு கிளறு கிளறவும். 
  • 2 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 2  விசில் வரை வேக விடவும்.
  • தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து  சேர்க்கவும்.
  • இந்த கூட்டு சாதம், சப்பாத்தி, தோசை, பூரி உடன் பரிமாற மிகவும் ருசியாக இருக்கும்.
குறிப்பு 

  • சுரைக்காய் யை உணவில் சேர்த்து வந்தால் உடல் சூடு குறையும், வெப்ப நோய்கள் ஏதும் அணுகாது, சிறுநீர் நன்கு வெளியேறும்.
  • நீ‌ரி‌‌ழிவு நோயா‌ளிக‌ள் சௌ சௌ, சுரைக்காய், பூசணிக்காய் போன்ற காய்கறிகள் சாப்பிடுவது மிகவும் நல்லது.









Monday, March 19, 2012

இஞ்சி குழம்பு


தேவையான பொருட்கள் 

இஞ்சி - 100gm
புளி-  சிறிய நெல்லிக்காய் அளவு
உப்பு - ருசிக்கேற்ப
கடுகு - 2 டீஸ்பூன்
துவரம் பருப்பு - 5 ஸ்பூன்
சிகப்பு மிளகாய் - 4
கருவேப்பிலை - தேவைகேற்ப
மஞ்ச தூள் - 1 டீ ஸ்பூன்
பெருங்காயம் - 1 சிட்டிகை
எண்ணெய் - தாளிக்க

செய்முறை 
1) முதலில் இஞ்சியை தோல் நீக்கி சுத்தம் செய்ய வேண்டும். பின் துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.


 2) ஒரு வாணலில் எண்ணெய் ஒரு ஸ்பூன் ஊற்றி வெட்டிய இஞ்சியை பொன் நிறம் ஆகும் வரை வதக்கவும்.

3) பின் ஆறவைத்து பேஸ்ட் ஆக அரைத்து தனியே வைத்து கொள்ளவும்.


4) வாணலில் எண்ணெய் ஊற்றி கடுகு, துவரம் பருப்பு, கருவேப்பிலை, சிகப்பு மிளகாய் தாளிக்கவும்.


5) துவரம் பருப்பு நன்கு சிவந்ததும் மஞ்ச தூள்,அரைத்த இஞ்சி விழுது,புளி கரைச்சல் உப்பு சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.


7) குழம்பு பதம் வந்த உடன் இறக்கி விடவும். கடுகு, சீரகம், சிகப்பு மிளகாய், பெருங்காயம், கருவேப்பிலை தாளித்து குழம்புடன் சேர்க்கவும்.

குறிப்பு:
  • இஞ்சியில் உள்ள சில மருத்துவத் தன்மைகள் இரத்தக் குழாய்களில் நேரிடும் இரத்த உறைவு காரணமாக வரும் மாரடைப்பைத் தடுப்பதாகக் கண்டு பிடித்துள்ளனர்.
  • ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி நசுக்கி, ஒரு கோப்பை பாலில் இட்டுக் காய்ச்சி வடிகட்டி, அதனுடன் கற்கண்டு சேர்த்து குடித்துவர, இருமல், சளி தொல்லைகள் நீங்கும்.
  • இயற்கையின் ஓர் கொடை தான் இந்த இஞ்சி, மூட்டு வலி உட்பட எந்த வலியையும் போக்கும் தன்மை இஞ்சிக்கு உண்டு. 
  • கொதிக்கும் தண்ணீரில் இரண்டு துண்டு இஞ்சியை நறுக்கிப் போட்டு, அந்த தண்ணீரை குடித்து பாருங்கள். சோடா வகைகளில் இஞ்சி சோடாவும் உண்டு.



Monday, October 17, 2011

வெஜிடபுள் புலாவ்




தேவையான பொருட்கள் 
பாஸ்மதி அரிசி - 2cup
பட்டை, லவகம், கிராம்பு - தலா 2
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
வெங்காயம் நீளமாக அரிந்தது - 1 கப்
தக்காளி பொடியாக அரிந்தது - 1 கப்
காய்கறி கலவை - 1 கப்
மிளகாய் தூள் - 2  ஸ்பூன்
மஞ்ச தூள் - 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
தயிர் - 1 கப்
கொத்தமல்லி புதினா - 1 கப்
வெண்ணை (அ) எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு
உப்பு - ருசிக்கேற்ப

செய்முறை


  • முதலில் பாஸ்மதி அரிசி யை கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
  • குக்கரில் வெண்ணை சேர்த்து உருகியதும், பட்டை கிராம்பு லவகம் தாளிக்கவும்.
  • இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நல்ல மணம் வரும் வரை வதக்கவும்.
  • பிறகு வெங்காயம் சேர்த்து பொன் நிறமாக வதக்கவும்.

  • இதனுடன் தக்காளி, காய்கறி கலவை, உப்பு, மஞ்ச தூள், மிளகாய் தூள்,பச்சை மிளகாய் இவை அனைத்தும் சேர்த்து 5 நிமிடம் வரை கிளறவும்.

  • கொத்தமல்லி, புதினா, தயிர் சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டவும். 

  • முடிவாக ஊற வைத்த அரிசியின் தண்ணீர் யை இருத்து விட்டு வதக்கிய கலவை யுடன் சேர்த்து 3 நிமிடம் கிளறவும்.
  • 1 கப் அரிசி க்கு ஒன்றை கப் அளவு தண்ணீர் என்ற விதத்தில் 3 கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி விசில் போடவும்.
  • 3 விசில் வந்ததும் அடுப்பை அனைத்து விடவும்.
  • வெஜிடபிள் புலாவ் தயார். தயிர் பச்சடி யுடன் பரிமாற மிக அருமையாக இருக்கும். 

Friday, October 14, 2011

ஓட்ஸ் பிஸ்கட்


                                 Homemade Oat Biscuits
தேவையான பொருட்கள்
ஓட்ஸ் - 2 கப்
மைதா - 2  கப்
பேகிங் பவுடர் - 3/4 ஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை
வெண்ணை (அ) வனஸ்பதி - 1 கப்
சக்கரை - 1 கப்
வன்னிலா எசென்ஸ் - 1  ஸ்பூன்
பால் - 1/4 கப்

செய்முறை

  • ஒரு பாத்திரத்தில் மைதா, ஓட்ஸ்.பேகிங் பவுடர் முன்றையும் கலந்து தனியாக வைத்து கொள்ளவும்.
             
  • வனஸ்பதி யை 5 நிமிடம் நன்றாக பீட் செய்யவும்.
  • அதனுடன் வன்னிலா எசென்ஸ் சேர்த்து நன்கு பீட் செய்யவும்.

  • பிறகு அதனுடன் சக்கரை சேர்த்து, முழுமையாக கரையும் வரை கிளறவும்.
  • இந்த கலவை யுடன் மைதா, ஓட்ஸ் கலவையும் சேர்த்து பிசையவும்.

  • கொஞ்சம் கொஞ்சமாக பால் தெளித்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும்.

  • சிறு சிறு உருண்டைகளாக்கி விரும்பிய வடிவம் செய்து பேகிங் தட்டில் வைக்கவும்
  • ஓவன் யை 180'c முன் சூடு செய்து 15 நிமிடம் பேக் செய்யவும்.

  • முடிந்ததும் மறு பக்கம் 5 நிமிடம் அதே போல் பேக் செய்யவும்.
  • ருசியான ஓட்ஸ் பிஸ்கட் தயார்.

குறிப்பு
  • சூடாக இருக்கும் பொழுது வேகாதது போல் இருக்கும் ஆனால் ஆறியதும் சரியாக இருக்கும்.
  • மெல்லிய வடிவங்களாக செய்யவும் அப்போது தான் சீராக வேகும்.
  • உணவு கட்டுப்பாடு உள்ளவர்கள் மேற் கூறியதில் வனஸ்பதி & சக்கரை இவ்விரண்டிலும் 1 கப்யிற்கு பதிலாக 1/2 கப்  உபயோக படுத்தி கொண்டு பாலின் அளவை 1/2 கப் ஆக உயர்த்தி கொள்ளவும். அப்பொழுது பெரிதாக சுவை மாற்றம் ஏதும் இருக்காது.
  • ஓவன் இல்லாதவர்கள் குக்கரில்(விசில் போட கூடாது) மணல் போட்டு மேலே அலுமினியம் தட்டில் பிஸ்கட் யை வைத்து 15 நிமிடம் பேக் செய்யலாம்.

Thursday, October 13, 2011

சுரைக்காய் பிரட் கோப்தா கிரேவி




தேவையான பொருட்கள்

கிரேவி செய்ய
சுரைக்காய் - 1/4 கிலோ
தக்காளி -3 துருவியது
வெங்காயம் - 3 அரைத்தது
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
தனியா தூள் - 2 ஸ்பூன்
கரம் மசாலா -1 ஸ்பூன்
மஞ்சள் பொடி- 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தயிர் -1/4 கப்
சீரகம் -1 ஸ்பூன்

கோப்தா செய்ய
பிரட் - 6 பீஸ்
தயிர் - 1/2 கப்
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி - 3 ஸ்பூன்
மைதா- 1/2 கப்
எண்ணெய் - பொரித்து எடுக்க

கோப்தா செய்முறை
                                               
                                   
  • பிரட்  துண்டுகளின் ஓரங்களை வெட்டி விடவும். பிறகு அதை தயிர் சேர்த்து 2 நிமிடம் ஊற வைக்கவும்.
  • அதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, பச்சை மிளகாய்,உப்பு சேர்த்து பிசையவும்.
  • இந்த கலவையில் சிறிது சிறிதாக மைதா சேர்த்து பூரி மாவு பதத்தில் பிசையவும்.
  • சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
  • உருண்டைகளை பொன் நிறமாக பொரித்து எடுக்கவும்.
கிரேவி செய்முறை
    
                                                         
                              
  • சுரைக்காயை துருவி, வேக வைக்கவும்.
  • வேக வைத்த சுரைக்காயை பேஸ்ட் போல் அரைத்து வைத்து கொள்ளவும்.
  • கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சீரகம் தாளித்து, அரைத்த வெங்காயம் சேர்த்து பொன் நிறமாக வதக்கவும்   
  • மஞ்ச தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், தனியா தூள் சேர்த்து வதக்கவும்.
  • இப்பொழுது துருவி (அல்லது அரைத்து) வைத்துள்ள தக்காளி சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.
  • பிறகு சுரைக்காய் பேஸ்ட்,கொஞ்சம் தயிர் சேர்த்து வதக்கவும்.
  • இப்பொழுது சிறிது தண்ணீர் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை கொதிக்க விடவும்.
  • கடைசியாக பொரித்து வைத்துள்ள கோப்தா வை போட்டு கொத்தமல்லி தூவி இறக்கவும்.
  • இந்த கிரேவி சப்பாத்தி, பூரி, ரொட்டி, பரோட்டா உடன் சேர்த்து சாப்பிடும் பொழுது சுவையாக இருக்கும்.
குறிப்பு

  • எண்ணெய் சரியாக சூடாகாமல் கோப்தா போட்டால் எண்ணெய் குடிக்கும்.
  • பரிமாறும் பொழுது கோப்தா வை கிரேவி யில் சேர்க்கவும்.